Tuesday, July 25, 2023

வைகோ அவர்களின் கவனத்திற்கு......

நாடாளுமன்றத்தில் நாங்கள் அருகருகே அமர்ந்திருந்தோம். எங்களுக்கு அருகில் மத்தியில் குவாலியர் ராணி ராஜமாதா சிந்தியா அமர்ந்திருந்தார். அவர் சபைக்கு வராத நாட்களில் எங்களுக்குள் நெருங்கிய நட்பு ஏற்பட்டது என்று செயாவுடனான பழைய தொடர்பு பற்றி வைகோ சொன்னார். ( தினமணி 02-04-2006)

வைகோ, இம்மாம் பழைய ஞாபகம் உங்களுக்கு இருக்கே, சென்ற செயா ஆட்சியில் கோடி கோடியாய் கொள்ளை அடிச்ச சம்பவம் ஒன்னு கூடவா உங்களுக்கு ஞாபகம் இல்ல?.

வைகோ நீங்க, அப்படியே செயா அடித்த கொள்ளையையும் அப்படியே மேடையில அப்பப்ப பேசுங்க. அப்படி பேசினா, நீங்க உண்மையையே பேசுவதாக மக்கள் நம்புவார்கள். உங்களுக்கு புனிதர் பட்டங்கள் கூட நாங்க தரோம்.

வைகோ அவர்களே உங்களுக்கே தெரியும். புனிதர் பட்டத்துக்கு நீங்க தகுதியில்லன்னு. கோடி கோடியாய் கொள்ளையடித்து தங்கமாய் அலைந்த செயாவிற்கு “தங்க தாரிகை“ பட்டம் கொடுத்தாங்க இல்லியா? அது போல உங்களுக்கு “புளுகுப்புனிதர்“ என்ற புதிய பட்டம் ஒன்னும் தரோம்.

கடந்த 20 நாட்களில் அவரை 3 முறைகள் சந்தித்துள்ளேன் நான் அவரிடம் கண்ட கடல் அளவு மாற்றம் என்னை திகைப்படைய வைத்துள்ளது. அது உண்மை, அவர் படிப்பாளி, விவேகி, அதிபுத்திசாலி என்று வாங்கிய காசுக்கு குறைவில்லாமல் விசுவாசமாக சேவை ஆற்றுகிறீர் வைகோ.


இதோ சென்ற கூட்டணியில் இருந்தவர்கள் என்ன் சொன்னார்கள் என்பதைப் பார்ப்போம்.

மூப்பனார் காங்கிரசு, இரண்டு பொது உடைமைக்கட்சிகள், பா.ம.க கட்சிகளை தேர்தல் முடிந்தவுடன் தூக்கி எறிந்தார். காசு விட்டு எறிந்தால் அவர்கள் காலடியில் வீழ்பவர்கள் தான் அவர்கள் என்று செயாவிற்கு தெரியும்.

தூக்கி எறியப்பட்ட போது, அவர்கள் சொன்ன வார்த்தை "செயா மிகவும் மாறிவிட்டார்" என்பதுதான்.

வைகோ அவர்களே! செயா அவர்களிடம் நீங்கள் கண்ட கடல் அளவு மாற்றம் இப்போது உங்களை திகைப்படைய வைத்துள்ளது போல் மீண்டும் நீங்கள் திகைப்படையும் காலம் வெகு தொலைவில் இல்லை.

அப்படி இல்லையென்றாலும் செயா உங்கள் முகத்தில் குத்துவார் அப்போது நாங்கள் வேடிக்கைப் பார்ப்போம்.

ஒருவேளை வாங்கிய காசுக்கு நீங்கள் காலை நக்கிக் கொண்டிருந்தால் நீங்கள் மீண்டும் மீண்டும் திகைப்படைய வாய்ப்புண்டு, ஆனால் அவ்வாறு நடக்குமேயானால் வைகோ அவர்களே தயவு செய்து தமிழன், சுயமரியாதை, மானம், வெட்கம், என்று ஒருபோதும் பேசிவிடாதீர்கள்.

அப்படி நீங்கள் பேசினால் தமிழ் அகராதியில் அந்த வார்த்தைகளும் மானமிழந்து விடும். அப்படியும் பேசுவீர்களேயானால் சொரணையுள்ள தமிழர்களாகிய நாங்கள் அந்த வார்த்தைகளுக்கு அகராதியில் கீழ்க்கண்டவாறு பொருள் மாற்றுவதைத்தவிர வேறு எங்களுக்கு வ்ழியில்லை.


தமிழன் – வெக்கங்கெட்டவென்,

சுயமரியாதை - மானங்கெட்டத்தனம்,

வெட்கம் - சொரணையில்லமை,

மானம் - சூடு சொரணையில்லாம் துதி பாடல்,

மக்கள் நலம் - ஏமாற்று வேலை,

என்று மாற்றிவிடுவோம்.

சரி போகட்டும்.


கூட்டணியில் சேர்ந்த போது நீங்கள் என்ன சொன்னீர்கள், எங்கள் கட்சிக்கு எது நல்லதோ அதை நான் செய்தேன். நான் என்னைப்பற்றி கவலைப்பட வில்லை என்று தானே!.


கட்சிய வளர்க்க, உங்க தொண்டர்களுக்கு நல்லதுக்கு இந்த முடிவு எடுத்தீங்க இல்லியா?

இப்ப மக்கள் நலம் மக்களுக்காகத்தான் கூட்டணி சேர்ந்தேன்னு இப்ப பேசுறீங்க.


கட்சி நலன் அப்படின்னா என்ன? உங்க தொண்டர்கள் காண்ட்ராக்ட் எடுக்கணும், சொத்து சேர்க்கணும், இவ்வளவு நாள் உழைத்த தொண்டர்களுக்கு கொள்ளை அடிக்க ஒரு வாய்ப்பு உருவாக்கித் தரனும் நல்ல முடிவு தான். நாலு கல்யாண மண்டபம், சொத்து சொகம் எல்லாம் உங்கள் தொண்டனுக் கும் கிடைக்க வேண்டாமா?.


செயலலிதாக்கிட்ட பயிற்சி எடுத்துக்குங்க. எப்படி கவர்னர வாங்கலாம், நீதிபதி வீட்டில எப்படி கரண்ட் கட்பண்றது. எல்லாமே அத்துபடியாகிவிடும்.

கருணாநிதிக் குடும்பத்துக்கு மட்டும் இத்தனை சொத்து இருக்கலாமா? அது தானே வைகோ உங்க கோபம்.


செயா சென்ற தேர்தலில் திருடத்தெரியாமல் திருடினார், மாட்டிக்கிட்டார். இந்த முறை பாருங்க யாருக்காவது தெரியுமா?


****

தமிழர் நலமே வாழ்வின் லட்சியம் அப்படி இப்படின்னு புளுகிறீங்களே வைகோ இது ஞாயாமா?


மக்கள் நலம் பற்றி கொஞ்சமாவது அக்கரை இருக்கிறதா உங்களுக்கு, இருந்தால் கொள்ளை ராணியிடம் கூட்டு சேர்வீர்களா?.


உங்க கூட்டணியில அதிகமா விமர்சிக்கப்படுவது நீங்களும் திருமாவும் தான், நீங்க தான் கொள்கை அப்படி இப்படின்னு பேசி மக்கள ஏமாத்துறீங்க, ஆனா உங்க புரட்சித்தலைவியோ உங்களுக்கு கொள்கையும் இல்ல ஒரு பொடலங்காயும் இல்ல எல்லாம் என் பொட்டிக்குள் அடக்கம்னு கொள்கைய பத்திமட்டும் பேசுவதேயில்லை.


உங்களைப்போன்றவர்கள் தான் “தாயே உன்னடி சரணம்“ என்று தலைகுப்புற கவிழ்ந்து கிடக்கிறாங்க. செயலலிதா புனிதமானவர், ஈழப்பிரச்சனையில் அக்கறையுடன் இருக்கிறார். அப்படி இப்படின்னு புளுகிறீங்க. சிங்களத்து சிறுக்கி சந்திரிகாவோடு கூட்டு சேர்ந்த போது நீங்க தானே கத்திக்கிட்டிருந்தீங்க.

கடைசியா உங்களுக்கு ஒரு ஐடியா தரேன் கேளுங்க.


பேசாம கட்சிய கலைச்சிட்டு "அம்மாவே சரணம் அப்படின்னு கால்ல விழுந்திடுங்க" ஒரு வேள உங்களுக்கு "சபாநாயகர் வேலக்கூட" கிடைக்கலாம். தேர்தல்ல நிக்க்கமலே சபாநாயகர் பதவியா?

ஆச்சரியப்பாடாதீங்க வைகோ.

"பொட்டியிருக்கிற வரைக்கும் கடவுளே வந்தலும் காலடியிலே தான்."

Friday, December 20, 2013

தமிழில் எழுத்துரு அடோபி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

 தமிழில் இரண்டு ஒருங்கு குறி எழுத்துருக்களை அடோபி நிறுவனம் வெளியிட்டுள்ளது. http://blogs.adobe.com/typblography/2013/09/adobe-tamil-gujarati.html  இந்த தமிழ் எழுத்துக்களை வடிவமைத்தவர் Fernando Mello. Fiona Ross மற்றும் ரத்தின ராமநாதன் உதவியுடன் வடிவமைத்துள்ளனர். முன்னதாக தேவநகரி, குர்முகி யிலும் தற்போது தமிழ் மற்றும் குசராத்தி மொழியில் எழுத்துருக்களை வெளியிட்டுள்ளது.

 
அடோபி நிறுவனம் தமிழ் மொழிக்கு அவர்கள் தயாரிக்கும் மென் பொருட்களில் மிக எளிதாகவே ஒருங்குகுறி வசதியை அளித்திருக்க முடியும். ஆனால், தமிழில் அதிக சந்தை இல்லை என்பதோடு மிக அதிக அளவில் அனுமதியில்லாத மென்பொருட்களாக பயன்படுத்தப்படுவதால் தமிழுக்கான வசதியை அளிப்பதில் அந்த நிறுவனம் மிகுந்த தயக்கம் வெளியிட்டதாக தெரிகிறது.

ஏற்கனவே தமிழ் எழுத்திற்கு ஆதரவு அளிக்கவே தயங்கிய அடோபி நிறுவனம் வெளிநாட்டு தமிழர்களின் சிலரின் நெருக்குதலில் காரணமாகவே தமிழ் மொழிக்கான ஒருங்கு குறி ஆதரவு வெளியிட்டிருந்தது. இப்போது தமிழ் மொழிக்கு இரண்டு எழுத்துருக்களை வெளியிட்டுள்ளது.

http://store1.adobe.com/cfusion/store/html/index.cfm?store=OLS-US&event=displayFontPackage&code=1965

Thursday, December 20, 2012

விண்டோசு 8 இல் தமிழ் வசதி

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோசு 8 இல் தமிழுக்கான வசதி அளிக்கப்பட்டுள்ளது. நன்கு மேம்படுத்தப் பட்டவகையில் வெளிவந்துள்ளது.
தொடுதிரை வசதி அளிக்கப்படுள்ளது.  ஆனால் அதற்கென தனி கணினித்திரை தேவையாக உள்ளதால் அதனை சோதிக்க இயலவில்லை.

"எக்சுபி" யில் லதா என்ற எழுத்துரு சேர்க்கப்பட்டது. இதுவே, பலரால் இன்று வரை பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், விண்டோசு 7 இல் விசயா என்ற எழுத்துருவும், விண்டோசு 8 செயலிக்கு  நிர்மலா என்ற புதிய எழுத்துருவும் சேர்க்கப்பட்டுள்ளது.


இதிலுள்ள இணைப்புகள் பல இன்னும் தமிழில் தெரியவில்லை. இவை தமிழ் படுத்தப்படும் வசதி இருக்குமா என்பது தெரியவில்லை.

விண்டோசு 8இல் தொடக்கம் Start மெனு என்று இல்லை மாறாக கீழே உள்ள படத்தில் உள்ளது போல இணைய உலவி முதலில் உள்ளது. அடுத்து கணினியின் உள் செல்ல ஒரு கோப்பு உள்ளது. அதன் மூலம் தான் நாம் கணினியின் உள்ளே செல்ல வேண்டியுள்ளது. சாதாரணமாக விண்டோசு 7-வரை உபயோகித்தவர்கள் கூட இதனை பயன்படுத்துவது பற்றி என்று நன்றாக படித்தபின் இயக்கினால் சற்று எளிதாக இருக்கும். நுழைவது மற்றும் வெளிவருவது பற்றிய பயிற்சி இருக்கவேண்டும்.

தொடக்கம் பக்கம் வரவேண்டுமெனில் வலது பக்க மேல் பக்கமாக மவுசை வைத்தால் தொடக்கம், உள்ளிட்ட சில கருவிகள் தெரிகிறது. மீண்டும் எடுத்துவிட்டால மறைநிலைக்கு சென்று விடுகிறது.

விண்டோசு8 இல் புதிதாக இணைக்கப்பட்டுள்ள நிர்மலா எழுத்துறுவுடன் விண்டோசு7 இல் பயன்படும் விசயா எழுத்தின் தோற்றத்தின் படம் கீழே இணைத்துள்ளேன்.


Wednesday, September 05, 2012

வலையோசையில் என் வலைப்பூ

வலையோசையில் எனது வலைப்பூ தேர்தெடுக்கப்பட்டுக் கடந்த மேமாதம் வெளியிடப்பட்டது. அந்தச் செய்தியை நான் வெளியிடவில்லை. வலையோசையைப் பார்த்துவிட்டு எனது வலைப்பூவை பார்த்தால் அதே செய்தியை பார்க்க நேரிடும் என்பதால் அப்போது நான் வெளியிடுவதைத் தவிர்த்தேன். கடந்த மேமாதம் 23-05-2012 அன்று வெளிவந்த இந்தச் செய்தி மிகுந்த காலதாமதாமாக இப்போது வெளியிட்டுள்ளேன். 


முதல் பக்கம்

பக்கம் இரண்டு

Tuesday, September 04, 2012

போட்டோசாப் CS6 மென்பொருளிலும் தமிழ் ஒருங்கு குறி எழுத்துருக்களை பயன்படுத்தும் வசதி

போட்டோசாப் CS6 இல் தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளுக்கு ஒருங்கு குறி எழுத்துருக்கப் பயன்படுத்தும் வசதி அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல இன்டிசைன் CS6 மற்றும் இல்லுசுரேட்டர் CS6 ஆகியவற்றுக்கும் தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளுக்கு இந்த வசதி அளிக்கப்பட்டுள்ளது. நீண்ட நாட்களாக அளிக்கப்படாத இந்த வசதி தற்போது அளிக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சிக்குரிய செய்தியாக உள்ளது.
 

படம்-1
நான் போட்டோசாப் CS6 (PHOTOSHOP CS6) ஐ பதிவிறக்கம் செய்தபின்பு அதில் தமிழில் தட்டச்சு செய்த போது அதற்கான ஆதரவு இல்லை. எனவே, தமிழ் பயன்படுத்தும் வசதி கொடுக்கப்படவில்லை என்று கருதிக் கொண்டிருந்தேன்.

ஆனால், தமிழ் ஒருங்குகுறி எழுத்துருக்களைப் பயன்படுத்தும் வசதி அளிக்கப்பட்டதைப் பின்னர் நான் அறிந்தேன்.

போட்டோசாப் மென்பொருளில் தமிழை எழுத்துக்கள் சரியாகத் தெரிய வேண்டுமானால் அதன் அமைப்பில் சிறிய மாற்றம் செய்ய வேண்டும். அப்படிச் செய்தால் மட்டுமே, தமிழ் எழுத்துக்கள் அதன் சரியான வடிவில் தெரிகிறது. இல்லையெனில் கொக்கி கொக்கி வடிவத்தில் தான் தெரிகிறது

அமைப்பை எப்படி மாற்றுவது
போட்டோசாப்பில் மொழிக்கான அதன் அமைப்பை மாற்ற வேண்டுமானால் அதன் Edit பகுதிக்கு சென்று Preferences பகுதியை தேர்வு செய்யவேண்டும் பின்னர் அங்குள்ள Type என்பதைக் கிளிக் செய்யவும். பார்க்க படம்-2
படம்-2


பின்னர் Type என்பதைக் கிளிக் செய்த பின் Middle Eastern என்பதைத் தேர்வு செய்து போட்டோசாப் மென்பொருளை மீண்டும் தொடக்கவும். படம்-3 அவ்வாறு செய்தால் தமிழ் மொழியை கொக்கிகள் இல்லாமல் சரியான வடிவத்தில் தெரிகிறது. இதில் வழக்கம் போல ஏகலப்பை மென்பொருளைப் பயன்படுத்தித் தட்டச்சு செய்தால் எந்தப் பிரச்சனையும் இல்லாமல் உள்ளீடு செய்ய இயலுகிறது.

படம் 3
இந்தத் தமிழ் ஒருங்கு குறி பயன்படுத்தும் வசதி பலருக்கு மிகவும் உதவியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. என்பதோடு நமது மொழிக்கு மொன்பொருள் தாயாரிப்பாளர்கள் தொடர்ந்து புறக்கணித்த நிலையில் தற்போது ஆதரவு வழங்கியுள்ளது மகிழ்ச்சிக்குரிதாகும்.

அடோப் இன்டிசைன் CS6 இல் தமிழ் ஒருங்குறி பயன்படுத்தும் வசதி

அடோப் இன்டிசைனில் தமிழ் ஒருங்குறி எழுத்துக்களைப் பயன்படுத்தும் வசதி அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே  கோரல்டிரா X6 இல் தமிழ் ஒருங்கு குறி ஆதரவு வழங்கப்பட்டுள்ளது ஏற்கனவே இந்திய மொழிகளுக்கான வசதிகளை அடோப் நிறுவனம் அளித்ததாகச் செய்தியை தமிழ் குழுக்களின் வந்திருந்தது.

இருப்பினும் பலர் அது பற்றி அறிந்திருக்கவில்லை. எனவே, அது தொடர்பாக அனைவரும் அறியும் வகையில் இந்தப் பதிவை எழுத வேண்டும் என்றுவிரும்பினேன்.
இன்டிசைனில் உள்ள Windows ஐ கிளிக் செய்து கடைசியில் உள்ள Utilities ஐ கிளிக் செய்து பின்னர் Script ஐ தேர்வு செய்யவும். அதன் பின்னர் Script இல் உள்ள Indic preferences இருமுறை (Double click). கிளிக் செய்யவும்
நீங்கள் அவ்வாறு செய்தவுடன் தமிழ் மொழிக்கான வசதியை நீங்கள் பெறமுடியும். இவ்வாறு செய்த பின் நீங்கள் வழக்கம் போல ஏகலப்பை மென் பொருள் மூலம் இலகுவாக வழக்கம் போல் மற்றவைகளில் தட்டச்சுச் செய்வது போல தட்டச்சுச் செய்ய முடிகிறது.
கீழே உள்ள படம் எவ்வாறு செய்யப்பட்டுள்ளது என்பது விளக்கப் பட்டுள்ளது. 

கீழே உள்ளபடம் எந்தெந்த மொழிகளில் வழங்கப்பட்டுள்ளது என்பதற்காகப் படம் இணைக்கப்பட்டுள்ளது.

 எனவே நூல் வெளியீட்டுக்கும் பக்க வடிவமைப்பில் தமிழுக்கு இந்த வசதி மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

Saturday, May 19, 2012

பிரபாகரன் உயிரோடு இருக்கிறாரா? இன்றும் சில கேள்விகள்

சென்ற வாரம் என்னைச் சந்தித்த வழக்கறிஞர் நண்பர் கல்விச்செல்வன்  ஒரு கேள்வியை கேட்டார். பிரபாகரன் உயிரோடு இருக்கிறாரா? இல்லையா என்று.


இது போன்ற சந்தேகம் பலருக்கு இன்னும் இருக்கிறது. இத்தனைக்கும் அந்த நண்பர் தொடர்ந்து பல பத்திரிக்கைகளை படிப்பவர். சற்று விவரமானவர் கூட. இருப்பினும் இது போன்றவர்களுக்குக் கூட பிரபாகரன் உயிரோடு இருக்கிறாரா? இல்லையா? என்ற கொஞ்சமேனும் சந்தேகம் எழுவதற்கான காரணம் ஏற்கனவே, அவர் இரண்டு முறை கொல்லப்பட்டதாக சொல்லப்பட்டாலும் அந்த செய்தி உண்மையல்லாமல் போனதும் ஒரு காரணமாகும். உண்மையில் அவர் கொல்லப் படவேண்டும் என்று விரும்பிய இந்திய அமைதிப் படை அவர் கொல்லப் பட்டதாக ஒரு முறை தெரிவித்தது.


நக்கீரன் போன்ற பத்திரிக்கை வெளியிட்ட செய்தி போன்றவை இந்தகைய கேள்வி எழுவதற்கான ஒரு காரணமாகும். மேலும், இது போன்ற செய்திகளை ஈழ இணைய தளங்கள் தொடர்ந்து வெளியிடு வதும் மற்றொரு காரணமாகும்.


ஈழப்பிரச்சனை உச்சநிலையில் இருந்த  போதும் பிரபாகரன் கொல்லப்பட்டதாகவும், கொல்லப் படவில்லை என பல்வேறு செய்திகள் வெளிவந்த நிலையில் இணைய பக்கங்களில் தீவிர விவாதம் நடந்து வந்த காலத்தில் அதன் உண்மை நிலையை அறிந்து கொள்ளவேண்டும் என்ற ஆர்வம் எனக்கும் இருந்தது.


மே 23 2009 நேரத்தில் கொல்லப் பட்டதாக சிலப் புகைப் படங்கள் வெளியாயின. அந்தப் புகைப் படத்துடன் பிரபாகரன்  அவர்களின் பழைய புகைப்படத்துடன் ஒப்பிட்டு நான் உறுதி செய்து கொண்டிருந்தேன். நண்பரின் சமீபத்தையை கேள்வியால் அந்த ஒப்பீடு படத்தை வெளியிட முடிவு செய்தேன்.

இந்தப் படத்தில் குறிப்பாக  மூக்கு, காதுப் பகுதி, காதுப் பகுதியின் கீழ் உள்ள மடிப்புகள் மற்றும் அவரது உடலில் உள்ள கரும் புள்ளிகள் ஆகியவற்றை ஒப்பிட்டே பார்த்தால் ஒத்திருப்பது தெரியவந்தது.

மே 18 க்கு பின் ஒருவாரகாலம் இதுபற்றி மிகத் தீவிரமான செய்திகள் இணையத்தில் உலவி வந்தன. அதன் பின்பு இணையத்தில் தீவிரமாக பிரபாகரன் உயிருடன் இருப்பதாக எழுதிக் கொண்டிருந்த நண்பர்கள் சிலருக்கு அனுப்பினேன். அதன் பின் இந்த கருத்தை அவர்கள் வலியுறுத்தி எழுதாமல் விட்டு விட்டனர்.

எனினும், இன்றுவரை பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா? என்ற கேள்விகள் எழுந்து கொண்டிருக்கிற நிலையில் இந்த புகைப்படம் சிலருக்கும் முடிவெடுக்க சிலநேரம் உதவலாம். என்ற நோக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

அதற்காக பிரபாகரனின் முழுப்படம் மற்றும் அதன் பின் அந்த படத்துடன் ஒப்பிட்டு மற்றொரு படமும் இணைக்கப் பட்டுள்ளது.

பிரபாகரன் உயிரோடு இருக்கிறாரா? இன்றும் சில கேள்விகள் கேட்டுக் கொண்டிருப்பவர்கள், இந்த படத்தை பார்ப்பார்களேயானால் இதன் மூலம் ஒரு முடிவை எட்டுவார்களா என்பது தெரியவில்லை.